அனுமதியியில்லாத கோயில்கள் அகற்றப்பட வேண்டும் – என்பதை அன்வார் வாபஸ்…

அனுமதியியில்லாத கோயில்கள் அகற்றப்பட வேண்டும் – என்ற கருத்தை அன்வார் வாபஸ் பெற வேண்டும்  அம்பிகா மற்றும் , சுரேந்திரன் ஆகியோர் பிரதமர் கோயில்களை ‘clean up’ ' அதாவது  அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தை அன்வார் வாபஸ் பெற வேண்டும் என்று கோருகின்றனர். பிரதமர் அன்வர் இப்ராஹிம்…

நமது அரசியல் பிரதிநிதிகள் மோடியிடம் பேசியது என்ன?

இராகவன் கருப்பையா- அண்மையில் மலேசியாவுக்கு குறுகிய கால வருகை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர். 'குலோஸ்ட் டோர் மீட்டிங்'(Closed Door Meeting) எனப்படும் அந்த ரகசிய சந்திப்பை யார் ஏற்பாடு செய்தது, எந்த தேதியில் எங்கு…

அன்வார் ஏன் தைப்பூசத்தன்று பத்துமலைக்கு செல்வதில்லை?

இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…

இந்திய சமூகத்தை கவர்வதில் நஜிப்பை போல யாருமில்லை

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் இந்திய சமூகத்தின் ஆதரவை ஈர்ப்பதில் மற்றத் தலைவர்களோடு ஒப்பிடுகையில், முன்னாள் பிரதமர் நஜிப் தனித்துவம் வாய்ந்த திறமையைக் கொண்டிருந்தார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. குறிப்பாக தைப்பூசத் திருவிழாக்களின் போது பல தடவை அவர் பத்துமலைக்குச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்த விதத்தை யாரும்…

அதிகாரத்தால் ஓரங்கட்டப்படும் திறன்மிக்க அரசியல்வாதிகள்

இராகவன் கருப்பையா - அரசியலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தான்தோன்றித்தனமான, சர்வாதிகார முடிவுகளினால் பல வேளைகளில் திறன்மிக்கவர்கள் ஓரங்கட்டப்பட்டு முற்றாக ஒதுக்கப்படுகின்றனர்.அதீதத் திறமை இருந்தும் அவர்களில் பலருடைய அரசியல் வாழ்க்கை அதோடு அஸ்தமனமாகிவிடுவது வேதனைக்குரிய ஒரு விஷயம். கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு நமது துணைப் பிரதமராக…

கட்சி அதிகாரத்தால் ஓரங்கட்டப்படும் திறன்மிக்க அரசியல்வாதிகள்

இராகவன் கருப்பையா- அரசியலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தான்தோன்றித்தனமான, சர்வாதிகார முடிவுகளினால் பல வேளைகளில் திறன்மிக்கவர்கள் ஓரங்கட்டப்பட்டு முற்றாக ஒதுக்கப்படுகின்றனர். அதீதத் திறமை இருந்தும் அவர்களில் பலருடைய அரசியல் வாழ்க்கை அதோடு அஸ்தமனமாகிவிடுவது வேதனைக்குரிய ஒரு விஷயம். கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு நமது துணைப் பிரதமராக…

இன்னும் 35 ஆண்டுகளில் நமது நிலைப்பாடு என்ன?

இராகவன் கருப்பையா - பிறரை நம்பியிராமல் நம்மை நாமே சுயமாக உயர்த்திக் கொண்டால்தான் வரும் காலங்களில் தலைநிமிர்ந்த ஒரு சமுதாயமாக இந்நாட்டில் நாம் வாழ முடியும் என்கிறார்  அறிவியலாளர் முனைவர் மகாலெட்சுமி அர்ஜுனன். இன்னும் சுமார் 35 ஆண்டுகளில், அதாவது 2060ஆம் ஆண்டுவாக்கில் இந்நாட்டின் மக்கள் தொகை  ஏறத்தாழ 43…

‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ – நஜிப் விவகாரம்

இராகவன் கருப்பையா - சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நம் நாட்டை ஆட்சி புரிந்த அம்னோ தற்பொழுது எந்த அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கட்சி இன்னமும் ஏன் மீண்டெழ முடியாமல் பரிதவிக்கிறது என்றால் முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரம்தான் அதற்கான மூலக்காரணம் என்பதில் துளியளவும்…

ஜ.செ.க.வை ‘கனம் தூக்கி பார்க்க’ துடிக்கும் அம்னோ

இராகவன் கருப்பையா - நம் நாட்டு அரசியலில் எந்த காலக் கட்டத்திலும் ஜ.செ.க. சீன சமூகத்தைத் தவிர வேறு யாரையும் நம்பி இருந்ததில்லை. தங்களை பல்லினக் கட்சி என அவர்கள் பறைசாற்றிக் கொள்கிற போதிலும் சீன ஆதிக்கத்தைதான் அது கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட ஒரு கட்சியை, அம்னோ…

நமது சாதனையாளர்களை போற்றிப் பாராட்டுவோமா!

இராகவன் கருப்பையா - தமிழ் நாட்டு சினிமா நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தின் 'ஒலி குறுந்தகடு'(Audio CD) அறிமுக விழா கடந்த சனிக்கிழமை 27ஆம் தேதியன்று நம் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது நாம் அறிந்த ஒன்றுதான். தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி மலேசிய சாதனை புத்தகத்தில்…

ம.இ.கா. வெளியேறினால் அது  ஐ.பி.எஃப். கட்சிக்கு ‘ஜேக்பாட்டாகுமா!

இராகவன் கருப்பையா - தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா. விலகினால் அக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான ஐ.பி.எஃப். கட்சியின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாரிசானில் ஓர் உறுப்புக் கட்சியாக அங்கம் வகிக்க அக்கட்சி நீண்ட நாள்களாகவே போராடி வருகிறது. ஆனால் 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டார்,'…

மஇகாவின் தலைவிதி அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும் – ஜாஹிட்

பிஎன்-இலிருந்து மஇகா விலகுவது குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 14-17 வரை நடைபெறவிருக்கும் அம்னோவின்  வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் ஜாஹிட் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.. “அடுத்த ஆண்டு ஜனவரியில் நாங்கள் பிஎன் உச்ச மன்றக் கூட்டத்தை நடத்துவோம், அப்போது நாங்கள் முடிவு…

நிமோனியாவை விட இருதய நோயால் அதிக இறப்புகள்

மலாய் மற்றும் இந்திய சமூகங்களிடையே இருதய நோயால் அதிக உயிர்கள் பலியாயின, மேலும் சீனர்கள் மற்றும் பிற பூமிபுத்ரா சமூகங்களில் நிமோனியா அதிக உயிர்களைக் கொன்றது. புள்ளிவிவரத் துறையின்படி, இதய நோய் கடந்த ஆண்டு 17,421 இறப்புகளை ஏற்படுத்தியது, அல்லது மருத்துவ ரீதியாக சான்றளிக்கப்பட்ட இறப்புகளில் 13%. 2024 ஆம்…

ம.இ.கா-வின் ஆவேசம்: பதவிகளுக்கா மக்களுக்காகவா?

இராகவன் கருப்பையா- அண்மைய மாதங்களாக ம.இ.கா.வின் போராட்டம் எத்தகைய இலக்கை நோக்கி பயணிக்கின்றது எனும் ஐயப்பாடு  தற்போது எழுத் தொடங்கிவிட்டது. ஏனெனில், "அம்னோ வாக்குத் தவறிவிட்டது. அமைச்சரவையில் கட்சிக்கு இடமில்லை. அரசாங்க நிறுவனங்களிலும் நியமனங்கள் இல்லை," என தங்களுக்கான பதவிகளைப் பற்றிதான் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களேத் தவிர பெரும்பாலான வேளைகளில்…

பசுபதி சிதம்பரம்: நம் காலத்தின் மனிதர்- ம. நவீன்

இன்று வழக்கறிஞர் பசுபதி அவர்களுக்குப் பிறந்தநாள். பொதுவாக என் ஆசிரியர்களாகக் கருதக்கூடியவர்களை நான் ஒவ்வொருநாளும் நினைப்பதுண்டு. என் பேச்சில் அவர்கள் பெயர் இயல்பாக வந்துவிழும். இலக்கியப் பேச்சுகளில் ஜெயமோகன் பெயரை உச்சரிக்காத ஒரு நாள் இருந்ததில்லை. இலக்கியம் குறித்து பேசாமல் ஒரு நாள் கடந்ததும் இல்லை. யாராவது மனச்சோர்வில் என்னிடம் பேசும்போது,…

ரோமானியர்கள் மலாய்க்காரர்கள் வழிதான்  கப்பல் கட்டும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர்

பண்டைய ரோமானியர்கள் மலாய் மாலுமிகளிடமிருந்து கப்பல் கட்டும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று கூறியதற்காக ஏளனம் செய்யப்பட்ட மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக (IIUM) விரிவுரையாளர் ஒருவர் தனது கூற்று சரியென்று வாதிடுகிறார். அரபு மொழி விரிவுரையாளர் சோலேஹா யாக்கோப், 2005 இல் தனது முனைவர் பட்டத்தை முடித்ததிலிருந்து "விரிவான…

மலாய்க்காரர்கள் பெரும்பான்மை தொகுதியில் இந்திய டிஏபி தலைவர்கள் போட்டியிட தயாரா?

மலேசியர்கள் அனைவரும் தங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினால், டிஏபி உறுப்பினர்கள் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் போட்டியிட வேண்டும் என்று மா இ கா  துணைத் தலைவர் எம். சரவணன் சவால் விடுத்துள்ளார். ஐடிசிசி ஷா ஆலமில் நேற்று நடைபெற்ற இளைஞர், பெண்கள் மற்றும் இளம்…

அன்வார் பள்ளிகளில் பிரம்படி தண்டனையை ஆதரிப்பது — வருந்தத்தக்கது

ப. இராமசாமி, உரிமை தலைவர் பள்ளிகளில் கடுமையான விதிமுறைகளின் கீழ் பிரம்படி தண்டனை வழங்கலாம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்தது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று. அன்வார் ஒருகாலத்தில் ஆசிரியராக இருந்திருக்கலாம்; அவர் குறும்பு மாணவர்களை பிரம்பால் அடித்திருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, அது அக்காலம் — அப்போது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்,…

இறந்தவர்களுக்கு மதுபானமா? இறப்புக்கு பட்டாஸ் வெடிப்பதா?

இராகவன் கருப்பையா - மரணமடைந்த ஒருவரின் சவப் பெட்டிக்குள் மதுபானங்களை ஊற்றும் அசிங்கமான ஒரு கலாச்சாரம் நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாராரிடையே தற்போது தலைதூக்கியுள்ளது. சகல சாங்கியங்களும் நிறைவடைந்த பிறகு, சவப் பெட்டிக்குள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் இறந்தவரின் வாயில் 'பீர்,' அல்லது 'விஸ்கி,' போன்ற மதுபானங்களை கொஞ்சம் ஊற்றுகிறார்கள்.…

பள்ளிகளில் நிகழும் வன்முறைகள் – அவசர ஆய்வு தேவை   

இராகவன் கருப்பையா - நம் நாட்டிலுள்ள வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் இம்மாதம் நிகழ்ந்துள்ள 3 கொடூர வன்முறைச் சம்பவங்கள் நம்மை மிகுந்த சோகத்தில் ஆழ்த்துவதோடு ஓரளவு கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இம்மாதம் 2ஆம் தேதி நெகிரி செம்பிலான், செரம்பானில் உள்ள ஒரு தொடக்க நிலை பள்ளிக் கூடத்தில் 10 வயது சிறுவன் ஒருவன்…

நாம் யார்? முதலில் வருவது இனமா, தேசமா? – டேவிட்…

முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் ஒருமுறை தான் முதலில் மலாய்க்காரர் என்று அறிவித்தார். அந்தக் கூற்று தீங்கற்றது. அவர் பிரதமராக இருந்தபோது நான் அவரிடம் கேட்ட கேள்வி, அவர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமரா என்பதுதான். துங்கு அப்துல் ரஹ்மான் அந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். அவர் அனைத்து மலேசியர்களுக்கும்…

சிங்கப்பூரின் வளர்ச்சியில் கட்டாய மரண தண்டனை ஒரு கரும்புள்ளி

ப. இராமசாமி தலைவர், உரிமை - சிங்கப்பூர் உலகின் மிகச் சிறந்த நவீனமும் முன்னேற்றமுள்ள நகர-நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் இல்லாத அளவுக்கு முன்னேற்றமான கட்டுமான வசதிகள், திறமையான ஆட்சி, நவீன வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அரசியலால், அரசு மிகவும் நிலைத்ததாக உள்ளது. ஆட்சி செய்யும் கட்சி எப்போதும்…